பிரியத்தின் பலிபீடங்களில் உங்கள் தலைகளை எதன் நிமித்தமாக வைத்தீர்கள்
என்பதை இப்போது யோசிக்கும்போது அது ஒரு அபத்த நாடகத்தின் காட்சிபோல
இல்லையா? நீங்களே எழுதி நீங்களே நடித்து நீங்களே பார்வையாளராக இருக்கும்
அந்த நாடக அரங்கில் காட்சிகள் முடிந்து நீங்கள் மட்டும்
அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு எழும் கேள்வி ஒன்றுதான், ‘எல்லாம்
எதற்காக?’. மனுஷ்ய புத்திரன் அளிக்கும் பதில் மிகவும் எளிமையானது,
‘அன்புக்காகவும் கடவுளுக்காகவும்.