பசியின் வேதனை என்பது ஒரே நேரத்தில் உடலையும், உள்ளத்தையும் பிளக்கும் வலியாகும். வறுமையின் சுமை, சமூகத்தின் பாரம், மற்றும் மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம் எல்லாம் இவை சேர்ந்து உருவாக்கும் உண்மைத் துயரங்களை கலைநயமிக்க வார்த்தைகளால் பதிவு செய்திருக்கும் கவிதைத் தொகுப்பே இந்த நூல்.
"பசி வறுமைப் பாச்சோறு" வாசகனின் உள்ளத்தை நெகிழச்செய்து, கருணை, அக்கறை, மனிதநேயம் ஆகியவற்றின் மதிப்பை உணர்த்தும் ஒரு உணர்ச்சி பூர்வமான குரல்.