எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல்
உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ
சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு
திரை விழுகிறது. இது ரகசிய உரையாடல்களின் காலம், ஸ்க்ரீன் ஷாட்களுக்கும்
கால் ரிக்கார்டர்களுக்கும் அஞ்சாமல் தொடரும் வேட்கையின் உரையாடல்கள்
அப்புறம் பேசறேன் என்ற இடைவேளையோடு துண்டிக்கப்படுகின்றன. மீதி உரையாடலை
மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் தொடர்கின்றன.