எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் ஆனால் அவருடனான நேர்காணல் ஏதும் கீற்று-வில் இது வரை இடம் பெறவில்லை. அவர் விருது பெற்றமை குறித்த பா.செ.வின் வயிற்றெரிச்சல் கட்டுரை மட்டுமே இடம் பெற்றது. எனவே எனது ஆய்வுக்காக அவருடன் நான் நிகழ்த்திய ஒரு நேர்காணலை அனுப்பி உள்ளேன். சிறுகதைத் தொகுதிகள் பதினெட்டு, குறுநாவல்கள் நான்கு, நாவல்கள் ஆறு, கட்டுரை நூல் ஒன்று என இருபத்தொன்பது நூல்கள் வெளிவந்துள்ளன. இன்னும் பலநூல்கள் வெளிவரத் தயாராக உள்ளன. சமீப காலமாக நிறைய பல்துறைக் கட்டுரைகள் எழுதி வருகிறார். அவரது மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பிற்குத்தான் சாகித்ய அகடெமி விருது வழங்கப்பட்டிருக்கிறது.