கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி.