சுய முன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமும் அக்கறையும் உண்டு. காரணம் இன்றைய சமுதாய சூழ்நிலையில் சுயமுன்னேற்றக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு எடுத்துச் சொல்ல வேண்டியது என் போன்ற எழுத்தாளர்களது கடமை என்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு என்னதான் கல்வியும் செல்வமும் குறைவில்லாமல் இருந்தாலும் சுய முன்னேற்றக் கருத்துக்கள் மனதில் பதிந்தால்தான், அதன்படி அவன் நட்க்க முற்பட்டால்தான் இந்த சமுதாயத்தில் மற்றவர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ முடிகிறது.