‘பூக்காத மாலை’, ‘மானுடப் பிரவாகம்’, ‘தாய்மதி’, ‘உயிர்க்காற்று’ உள்ளிட்ட 24 சிறுகதைத் தொகுப்புகள், ‘பாசத்தீ’, ‘மரம்’, ‘கோடுகள்’ உள்ளிட்ட ஆறு குறுநாவல்கள், ‘அச்சமே நரகம்’, ‘ஆகாய சிறகுகள்’, ‘முற்றுகை’, ‘முழு நிலா’ உள்ளிட்ட ஆறு நாவல்களை எழுதியிருக் கிறார். “எனக்கு எழுத மட்டும்தான் தெரியும்” என்று சொல்லிக்கொண்டு பேசத் தொடங்கிய அவர், சிறந்த பேச்சாளராகவும் இலக்கிய மேடைகளில் வலம் வந்தார். ‘சிறுகதை படைப்பின் உள்விவகாரங்கள்’ எனும் அவரது சிறுகதை குறித்த கட்டுரை நூல், புதிதாக எழுத வருபவர்களுக்கு ஒரு கையேடாகப் பயனளிக்கக் கூடியது.