ஒரு குடத்தில் இருக்கும் தண்ணீரைப் பார்த்து முக்கால் குடம் தண்ணீர் இருக்கிறது என்று ஒருவரும், கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும். கால்குடம் தண்ணீர் குறைவாக இருக்கிறது என்று ஒருவரும் கூறுகிறார் என்றால் ஒருவர் நிறைவைக் காணுகிறார். ஒருவர் குறையைக் காணுகிறார் என்பது பொருள். பெரிய செல்வந்தர்கள் கூட டாட்டா, பிர்லாவுடன் தம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் போது தன்னிடம் இருக்கும் செல்வம் போதாது என்று குறைபட்டுக் கொள்கிறார்கள். அதே செல்வந்தர்கள் சாலை ஓரங்களில் உள்ள குடிசைகளில், வீதிகளில் வாழும் ஏழை எளியவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும்போது தனது செல்வத்தைப் பெரிதாக மதிப்பிடுகிறார்கள்.
மனிதன் எதிலும் குறைபட்டுக் கொள்ளும் பழக்கத்தை விட்டுவிட்டால் மனநிறைவு அடைகிறான். மனநிறைவு என்றும் மனமகிழ்ச்சியைப் பெருக்கும். தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ளதாக்குவதே மனிதப் பண்பாடு, அதனால் சோம்பலைத் துரத்திச் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும்.