சங்ககாலச் சூழல் மாறியபோது சங்க இலக்கியப் போக்கிலும்
மாறுபாடு தோன்றியது. வீரமும் காதலும் பாடுபொருளாக
மேலோங்கிய போக்கு மாறி, தமிழிலக்கியப் பரப்பில் அறநூல்கள்
ஒரு கணிசமான பகுதியாகத் தோன்றி வளர்ந்தன.
அறநூல்கள் என்று பொதுவாகக் கொள்ளப்படுவன நீதிமுறைகள்,
ஒழுகலாறுகள் என்பவற்றை நேரே எடுத்துக் கூறும் நூல்களாகும்.
இதைச் செய், அதைச் செய்யாதே என்று அறிவுறுத்தும் வகையில்
அமைந்தாலும் இலக்கிய நயம் தோன்றப் படைக்கப்படுவனவாகும்.
அதனால் அறநூல்களை இலக்கியங்களாகப் போற்றுவது
தமிழுக்குள்ள தனிச்சிறப்பாகும்.