கவிவேந்தர் கண்ணதாசனின்
கவிதை நயம் போல, கவியரசின் கதை நயம் மக்களைப் போய்ச் சேரவில்லை. அந்தக்
குறையை இந்த சரசுவின் சரசமான கதை, தீர்த்து வைக்கிறது.முற்பிறவியின் நினைவு வந்தால், அது என்ன பாடுபடுத்தும் என்று இக்கதை மூலம் கவிஞர் வருணித்துள்ளார்.மூன்று
பிறவிகளின் கதையை, முழுக் கதை போல, விட்டலாச்சாரியார் மாய மந்திரக் கதை
போல, கவிஞருக்கே உள்ள சிருங்கார சுவையில் எழுதி, நம் மனதில் நிறுத்தி
விடுகிறார் கவியரசர் கண்ணதாசன்! - முனைவர் மா.கி.ரமணன் கண்ணதாசன்
(ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப்
பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்,
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள்
பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல்,
தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக
அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.