"சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது.
ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். அவர்களும் அவர்களையே மூலதனமாக்கி பல வழிகளில் கொள்ளையடிக்கிறார்கள்.(பக்.91)
இப்படி கவியரசரின் சினிமா உலக அனுபவங்கள், யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. நல்ல பொழுதுபோக்கு நாவல்."