book

தடித்த கண்ணாடி போட்ட பூனை

Thaditha Kannaadi Potta Poonai

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :போகன் சங்கர்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789381975992
Add to Cart

கவிஞர் போகன் சங்கரின், ‘தடித்த கண்ணாடி போட்ட பூனை’ கவிதைத் தொகுப்பு, ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ சிறுகதைத் தொகுப்பும் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை பதிப்பகம்தான் வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில், முகநூல் பக்கத்தில் நடந்த விவாதம் காரணமாக உயிர்மை பதிப்பகத்துடன் தனது உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார் கவிஞர் போகன் சங்கர். மனுஷ்யபுத்திரனுடன் ஏதாவது ஒரு கருத்தை முன்னிட்டு சண்டையிடுவதும் அதன்பின்னர், சண்டை ஓய்ந்து சமாதானம் ஆவதும் இலக்கியத்தில் நடக்கும். மனுஷ்யபுத்திரனின் புதிய கவிதைப் புத்தகங்களுக்கு அட்டை வடிவமைப்பை முகநூலில் விமர்சித்து எழுதினார் போகன் சங்கர். ‘உயிர்மை தன்னுடைய அட்டைப் பட வடிவமைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். செயற்கைத்தனம் (பிளாஸ்டிக்தன்மை) அதிகமாக இருக்கிறது. ‘நீருக்குள் இருந்து சில குரல்கள்’ என்றால், நீருக்குள் ஒரு ஆள் இருப்பதுபோல் காண்பிக்க வேண்டுமா? ‘இருளில் நகரும் யானை’ என்றால் ‘இருட்டைக் காண்பிக்க வேண்டுமா?’ என்கிறார்.