book

அகநானூறு நித்திலக் கோவை

Agananooru Nithilak Kovai

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பாடல்கள் 13 அடிச் சிற்றெல்லையும் 31 அடிப் பேரெல்லையும் கொண்டுள்ளமையாலும் கலித்தொகை நீங்கலான பிற தொகை நூலில் காணப்படும் பாடல்களைக் காட்டிலும் நெடியனவாக இருப்பதாலும் இதற்கு ‘நெடுந்தொகை’ என்ற பெயரும் உண்டு. முதல் 120 பாடல்களைக் கொண்ட பகுதி ‘களிற்றியானை நிரை’ என்றும் அடுத்த 180 பாடல்களைக் கொண்ட பகுதி ‘மணிமிடை பவளம்’ என்றும் இறுதி 100 பாடல்களைக் கொண்ட பகுதி ‘நித்திலக் கோவை’ என்றும் அமைந்துள்ள முப்பெரும் பிரிவுகளை இந்நூலில் காணலாம். இப்பாடல்களைப் பாடியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 145.