book

கானல் நதி

₹490+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுவன் சந்திரசேகர்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

இசையை எதற்காகக் கேட்க வேண்டும்? சிந்தனையைக் கிளர்த்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஆற்றுப் படுத்துவதற்கும் இலக்கியம் உதவுகிறது என்றால், இசையின் பணி என்ன? சிந்தனையைத் தற்காலிகமாக மழுங்கச் செய்வதா?

சிந்தனை ஓய்ந்த மனத்தில் இசை கிளர்த்தும் அனுபவத்துக்குப் பெயர் என்ன? ஒருங்கமைக்கப்பட்ட இசைவடிவத்தில் சுதந்திரமாகத் திரியும் இசைஞன் எனக்குள் உருவாக்கும் கட்டற்ற நிலையை உத்தேசித்துத்தான் திரும்பத் திரும்ப அவனிடம் போய்ச் சேர்கிறேனா?

மீண்டும் மீண்டும் பலமுறை கேட்டதற்குப் பிறகும் ஒரு இசைக் கோவை புதிதாகவே இருக்கும் மர்மம் என்ன?

இசை பற்றிய அடிப்படை நுணுக்கங்களும் அடையாளங்களும் அறியாதவர்களின் இசையனுபவம் இன்னமும் ஆழமாய் இருக்குமோ?

(நூலின் பின்னுரையிலிருந்து...)