
குணங்குடி மஸ்தான் சாஷிப்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194865308
Add to Cartஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.
முன்னவரும் மூத்தவருமான தக்கலை ஞானி பீரப்பாவைப் போல பாடல்கள் மூலமாக தன் செய்தியைச் சொன்னவர் குணங்குடியார். அவர் ஒரு சித்தர் என்று கருதப்படுவதற்கும் இது முக்கியமான காரணமாக உள்ளது. சாதாரணமாக அவரது பேச்சே பாடலாகத்தான் வந்துள்ளது. தொண்டி என்ற ஊரிலிருந்து அந்தக்கால சென்னையின் காவாந்தோப்பு என்ற பகுதியில் குணங்குடியார் தங்கியதால் அந்தப் பகுதி பின்னாளில் தொண்டியார் பேட்டையாகி பின் ‘தண்டையார் பேட்டை’யாகிவிட்டது!
சத்தியத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்ட அனைவருக்கும் குணங்குடியாரின் வாழ்க்கையில் வழிகாட்டும் செய்திகள் நிறைய உண்டு. அதுவும் நாகூர் ரூமியின் கைவண்ணத்தில் என்றால் கேட்கவா வேண்டும்!
