book

புத்திசாலி கதைகள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

கிராமத்தில் ஒரு முட்டாள் கோழிக் குஞ்சு இருந்தது. அதன் மடத்தனத்தைக்கண்டு எல்லா ஜந்துக்களுமே எள்ளி நகையாடின. ஒரு நாள் கோழிக்குஞ்சு இரவு ஆனபிறகும் விளையாடிக் கொண்டிருந்தது. தாய்க்கோழி, “சூரியன் அஸ்தமித்து விட்டான். இருட்டாகிவிட்டது. வா, போகலாம்” என்று அழைத்தது.
கோழிக் குஞ்சுக்கு ஒரே திகைப்பு. “அம்மா! நீ என்ன சொல்கிறாய்? சூரியன் அஸ்தமித்து விட்டானா? அப்படியானால் ஒரேயடியாக இருட்டாகத்தானே இருக்கும்” என்றது கோழிக் குஞ்சு. அட, முட்டாளே! ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் அஸ்தமித்துவிடுவான். மறுநாள் காலையில் உதயமாகிவிடுவான்” என்று எடுத்துரைத்தது தாய்க்கோழி.