book

ஸ்புட்னிக் முதல் மங்கள்யான் வரை

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆதனூர் சோழன்
பதிப்பகம் :சிபி பதிப்பகம்
Publisher :Sibi Pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும்  முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு  ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். 

எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார்.

இத்தனைக்கும் நாங்கள் இருவரும் சந்தித்தது கூட கிடையாது. அறிவியல் நூல்கள் நிறைய வெளிவர வேண்டும் என்ற அவருடைய கனவை தொடர்ந்து நிறைவேற்றவே விரும்புகிறேன்.

இளைய தலைமுறைக்கு நான் செய்யும் சேவையாகவும் அது இருக்கும்.

2007 ஆம் ஆண்டு ஸ்புட்னிக் டூ காஸினி என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை தொகுத்தேன். அந்தப் புத்தகத்தை பாவை பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 

அப்போதே, அந்தப் புத்தகத்தை தமிழில் எளிமையாக தர வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆனால், சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

அதுவும் நல்லதுதான். 

முந்தைய எனது ஆங்கிலப் புத்தகத்தில் இந்தியாவின் சாதனை இடம்பெற வாய்ப்பு இல்லாமல் போயிற்று.

ஆனால், இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாறும் இடம்பெற்றுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சிப் பயணங்களில் அன்றைய சோவியத் யூனியன் முதல் வெற்றியைப் பெற்றது. 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி ஸ்புட்னிக் என்ற விண்கலம், முதன் முதல் விண்வெளிக்கு சென்று பூமியைச் சுற்றி சாதனை நிகழ்த்தியது.

அன்று தொடங்கியது விண்வெளிக் காலம். அதற்கு முன்னும் விண்வெளி ஆராய்ச்சி இருந்தது. ஆனால், விண்வெளிக்கே சென்று ஆராய்ச்சி செய்யும் புதிய நடைமுறை அன்றுதான் அறிமுகமாகியது.

தொடக்கத்தில் அமெரிக்கா பின்தங்கியிருந்தது. அதுதான் உண்மை.

விண்வெளிக்கு முதல் விலங்கு, முதல் மனிதன், முதல் பெண்மணி, நிலவில் முதன்முதலாக ஆளில்லாத விண்கலம் என்று சோவியத் யூனியன் பல பெருமைகளைப் பெற்று சாதனை படைத்தது.

அடுத்தடுத்த சில தோல்விகளுக்குப் பிறகு அமெரிக்காவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றது. நிலவுக்கு மனிதனை அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையை இன்று வரை அது தக்க வைத்துள்ளது.

மனித உயிர்களை பணயம் வைக்க சோவியத் யூனியன் மறுத்துவிட்டதே இதற்கு காரணம். நிலவில் மனிதன் செய்ய வேண்டிய ஆய்வுகளை சோவியத் யூனியன் ஆளில்லாத விண்கலங்கள் மூலமாகவே செய்தது. நிலவில் விண்கலத்தை இறக்கி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதை பூமிக்குத் திரும்பச் செய்தது சோவியத் யூனியன்.