book

சுதந்திரன் கவிதைகள்

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுதந்திரன்
பதிப்பகம் :ஓவியா பதிப்பகம்
Publisher :Oviya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

குமைந்து கொண்டிருக்கிற வேதனைகளையும், குமுறல்களையும் கவிதைகளாக்கி.. விழிகள் சுமந்து கொண்டிருக்கிற கனவுகளில் காணக்கிடைக்கிற வேப்பமயமான காட்சிகள் இங்கே நூல் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

சிதைவடையாத கனவுகளின் பதிவுகளாக – சிதைந்துபோன இருப்புக்களை கவிதைகளில் வெளிப்படுத்துகிறார். மண்ணை நேசிக்கிற – மண்ணின் மீதான உரிமையை இப்படியாக வெளிப்படுத்தும் பாங்கு கவிஞர். சுதந்திரன் அவர்களுக்கு வந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

இவர் இதுவரை 18 நூல்களை எழுதியுள்ளார்.

கவிஞர். சுதந்திரன் அவர்களின் நூலினை வெளியிட பேருதவி புரிந்திட்ட கவிஞர். முல்லை அமுதன் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

தன்னை முன்னிலைப் படுத்துகிற, தன்னை மட்டுமே அங்கீகரிக்க முனைகிற காலகட்டத்தில் – எந்த எதிர்பார்ப்புமின்றி, சுயநல நோக்கமின்றி மண் மீதான கரிசனங்களைக் கொண்ட பதிவுகளை மட்டுமே செய்துகொண்டிருக்கிற மூத்த படைப்பாளர் திரு. சுதந்திரன் அவர்களின் படைப்புகளை நூலாகப் பார்க்கிற வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திரு. முல்லை அமுதன்.

முற்றிலும் மரபுப் பாக்களாக வருமிந்த அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். இலங்கை மண்ணின் மூத்த படைப்பாளரின் நூலினை வெளியிடுவதில் ‘ஓவியா பதிப்பகம்’ பெருமை அடைகிறது.  

– வதிலைபிரபா