book

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதம் கோகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :212
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123428079
Add to Cart

மன்னார்குடி: மீத்தேன் திட்டத்தை தடுக்க கோர்ட்டை நம்ப வேண்டாம். மக்கள்தான் முயல வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சந்துரு  பேசினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்,  ‘’தேவை மரபு மாறா மனிதர்கள்’’, மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலம், போராட்ட களம் என்ற நூல் அறிமுக விழா  நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நூலை அறிமுகம் செய்து பேசுகையில்: மீத்தேன் திட்டம் இனி வராது என்றும், உரிமம்  காலாவதி என்றும் தமிழக அரசு சொல்கிறது. இரண்டும் தவறு. மக்களை திசைதிருப்பி கொண்டுவர அரசு முனையும். மீத்தேன் திட்டம் வந்தால் 670 சதுர கி.மீ  வரை பாதிப்பு ஏற்படும்.

சொந்த நாட்டிலேயே மக்கள் புலம் பெயர வேண்டியது வரும். இது போன்ற பிரச்னைகளுக்கு கோர்ட்டை நம்ப வேண்டாம். ஏனென்றால் கோர்ட் ஆய்வு கமிஷன்  அமைக்கும். அந்த கமிஷன் தனது ஆய்வு அறிக்கையில் இந்த திட்டத்தால் எந்த பாதிப்பு வராது என்று சொல்லும். அதை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல  வேண்டியிருக்கும். நம்மை காக்க நாம் தான் முயல வேண்டும். எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.