book

தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சொ. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :128
பதிப்பு :1
Add to Cart

தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும், பத்தில் நான்கு சொற்கள் செத்துப் போய்விட்டன என்றும் எழுத்தாளர் பொன்னீலன் கூறுகிறார்.

ஆங்கிலம் பேசும்போது தமிழ் கலவாதிருக்க ஆர்வம் காட்டுவோர், தமிழில் பேசும்போது ஆங்கிலம் கலவாமல் பேசுவதில்லை. இன்று படிப்பறிவில்லாதவர்கள் முதல் மெத்தப் படித்தவர்கள் வரை அவர்களின் கைபேசி எண்ணைக் கேட்டுப் பாருங்கள். எண்களை 'எய்ட் போர் ஜீரோ' என்று ஆங்கிலத்தில்தான் சொல்வார்கள்.

தமிழில் எழுதுவோரில் இன்று நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விழுக்காடு பிழைகளுடனேயே எழுதுகிறார்கள். எழுதும் பொழுதும் கவனமுடன் எழுதுவதில்லை. தவறுகளைத் திருத்துவதுமில்லை. மீண்டும் ஒருமுறை வாசித்தாலே போதும். பிழைகள் கண்களை உறுத்த வேண்டாமா!

எனக்குத் தமிழ் இவ்வளவுதான் வரும் என்றோ நேரமில்லை என்றோ சமாதானம் சொல்லக் கூடாது. இன்று சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி உட்பட அனைத்துத் தொலைக் காட்சிகளிலும் வரும் செய்திகளைப் பார்த்தீர்களென்றால் எழுத்துப் பிழைகளைக் காணலாம்.

இன்றைய தினமலர் (16.02.2016) பத்திரிக்கையின் 'பலரை கணவராக்கிய 'கல்யாண ராணி' என்ற செய்தியில் தொலைக்காட்சி தொடர்களில் என்பதை கொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் என்று பதிவாகி இருக்கிறது.

இன்று ஒரு பழைய மாதாந்திர தமிழ் திங்கள் இதழை வாசிக்க நேர்ந்தது. அதில் ஒரு கட்டுரையின் தலைப்பு ‘தமிழர் வாழத் தமிழ் போதுமா?’ என்பது. இது ’தமழர் வாழத் தமிழ் போதுமா?’ என அச்சாகியிருந்தது. புத்தகம் அச்சிடுவதற்கு முன் சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். அதைவிட அச்சுக் கோர்ப்பவர்க்கும் தமிழறிவு தேவை.

இதே இதழில் மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பெ.பாலசுப்பிரமணியம் என்பவர் ’தமிழில் பிழை ஆய்வு’ என்று ஓரு ஆராய்ச்சிக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்.