
மயிலும் வான்கோழியும்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கங்கா ராமமூர்த்தி
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நீதிகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஒரு மயில் இப்படித் தனது தோகையை விரித்து ஆடியதை ஒரு வான்கோழி கண்டதாம்! ஆ! உனக்கு மட்டும் தோகை உண்டா? எனக்கும் தான் உண்டு. இதோ நானும் தோகை விரித்து ஆடுகின்றேன் என்று தனது நாலங்குலத் தோகையை விரித்து ஆடினால் யாராவது அதை மதிப்பார்களா? சிரிப்பார்கள்!
அதைப் போல முறையாகக் கல்வியும், கவியும் கற்காத ஒருவன் பல அறிஞர் முன்னே தானும் ஒரு கவிஞன் தான் எனக் காட்டிக் கொள்ளத் தானே எழுதியோ அல்லது வேறு ஒரு கவியைத் திருடி சில சில மாற்றம் செய்தோ கவி பாடினால் உண்மைக்கவிஞர் உலகம் என்ன சொல்லும்? வான்கோழி தோகை விரித்து ஆடுகிறது என்று நகைக்க மாட்டார்களா? ஏதோ எழுதி வந்ததைச் சொல்லிவிடலாம்; அதில் கேள்வி கேட்டால் – போச்சு! சரிந்து சாய்ந்து விட வேண்டியிருக்கும்!
