
ஆகாயச் சிறகுகள்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மேலாண்மை பொன்னுச்சாமி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Out of StockAdd to Alert List
ஆய்வேடுக்கு ஏற்ப இவ்வாய்வேட்டை நான்கு இயல்களாக பிரித்துள்ளார். மேலாண்மை பொன்னுச்சாமியின் புதினங்களில் உள்ள பெண்ணியம் தொடர்பானவைகளை பேசினாலும் முதல் இயல் ‘பெண்ணியமும், பெண்ணியல் கோட்பாடுகளும்’ பற்றி பேசுகிறது. பெண்ணியம் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. பெண்ணியத்தின் தோற்றம் எதுவென சொல்கிறது. 1792ல் மோரி உல்ஸ்டோன் கிராப்ட் என்னும் பெண் ‘பெண்களின் உரிமைகளை நியாயப் படுத்துதல்’ என்று எழுதியதே முதல் பெண்ணியத் தொகுப்பு என்கிறார். மிதவாதம், தீவிரவாதம், மார்ச்சியம், தூய அல்லது மரபுநிலை, நவீனம், கூட்டுசேரா, இந்தியம், தலித் என்னும் பெண்ணியக் கோட்பாடுகளை விவரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியாவில் பெண்ணியச் சிந்தனைகள் எந்த அளவில் உள்ளன எனவும் பேசியுள்ளார். பெண் குழந்தைக் கொலை, இளமைத் திருமணம், பெண்களைத் தனிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, பலதார மணம் என பெண்கள் எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார். 1910ம் ஆண்டு முதல் இந்தியாவில் பெண்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளை பட்டியலிட்டுள்ளார். விடுதலைக்குப் பின்னான அமைப்புகளின் தொடக்கத்தையும் குறிப்பட்டுள்ளார். இவ்வியல் பொதுவானது. பெண்ணியச் சூழலைக் காட்டியுள்ளது.
