book

ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜனகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :214
பதிப்பு :6
Published on :2009
Out of Stock
Add to Alert List

ஸ்ரீ அரவிந்தரையும், ஸ்ரீ அன்னையையும் தரிசிக்க புதுச்சேரி செல்லவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.என் தந்தைக்கு மற்ற தெய்வங்களை வணங்க விருப்பம் இல்லை என அறிந்து மனதிற்குள் நானே ஒரு கோயில் எழுப்பி மலர்களைச் சமர்ப்பித்து வணங்கி வந்தேன்.அடுத்த வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளி ஸ்ரீ அரவிந்த அன்னை மாத மலரினை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி

அந்த மாமியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.நான் கல்லூரிக்குச் சென்றிருந்ததால் என் தந்தை அந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டதுடன், அதனைப் படித்தும் இருக்கிறார்."SSC (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) தேர்வு எழுத பாண்டிச்சேரி செல்லட்டுமா?'' என தந்தையிடம் கேட்டபொழுது, ஆஸிரமம் சென்று வருவதற்கும் சம்மதம் கிடைத்தது.சமாதி தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காக அந்தத் தேர்வினை, காரணங்காட்டி புதுச்சேரி சென்றேன். என்னுடன் என் தம்பியும் வந்தான்.நான் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரம் அவன் ஆஸிரமம் எங்கு உள்ளது என்பதனை விசாரித்து வந்துவிட்டான்.மதியம் இருவரும் சமாதி தரிசனம் செய்கையில், எனக்கு மறுபடியும் ஓர் அதிர்ச்சி.மனதில் ஏற்படுத்திய அதே சூழலையும் அலங்காரத்தையும் அங்கும் பார்த்ததுதான் அதற்குக் காரணம்.அதற்குப் பிறகு நான் ஆஸிரமம் செல்லவேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் என் தந்தையின் சம்மதம் கிடைத்ததுடன் அவரே துணைக்கும் வந்தார்.