book

நேருமாமா

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ். தியாகராசன்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :1998
Add to Cart

மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். சின்ன வயதிலேயே ஏழைகளுக்கு உதவும் எண்ணமும் மனிதர்களை நேசிக்கும் குணமும் அவரிடம் இருந்தன. வெளிநாட்டுக்குச் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்று வந்தாலும், வழக்கறிஞர் பணியில் அவர் மனம் செல்லவில்லை. தந்தையுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார் நேரு.

நாட்டுக்காக அனைத்தையும் இழந்தார். போராட்டமும் சிறைவாசமுமே வாழ்க்கைஆனது. அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் தன்னலமின்மையும், சுதந்தர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக அவரை ஆக்கியது.

ஐந்தாண்டு திட்டங்கள் வரைந்து இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் சென்றார். அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்தார்.

இந்திய மக்கள், இந்தியத் தலைவர்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்களும் நேரு மீது அன்பு வைத்திருந்தனர்.