தெம்புக்குப் படிங்க!
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தென்கச்சி கோ.சுவாமிநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :183
பதிப்பு :18
Published on :2016
Out of StockAdd to Alert List
தென்கச்சி ஒரு தேன் கச்சி என்பது அனைவரும் அறிந்த செய்தி. தேனீக்கு நிகராக இவர் ஆயிரமாயிரம் அறிவு மலர்களிலிருந்து ஞானத்தேன் துளிகளைச் சேகரித்து தம் தகவல் கட்டுரைகள் மூலம் தருகிறார் என்பதையும், தென்கச்சியின் பேச்சும் எழுத்தும் நகைச்சுவை இழையோடுபவை என்பதையும் உலகறியும். அப்படி நகைச்சுவையும் நற்கருத்துக்களுமாய் தென்கச்சி தொகுத்துள்ள 51 தகவல் கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல். கையில் எடுத்தால், ஒரே மூச்சில் முழு நூலையும் படித்து முடித்து விடலாம். தைரியமாக இருங்க, மனிதர்கள் ஜாக்கிரதை, கழுதையின் கண்டுபிடிப்பு, கடவுள் கவனிப்பாரா? போன்ற தலைப்புகள் ஒவ்வொன்றுமே நம்மை ஈர்க்கின்றன. கூடுதல் சிறப்பாக ஏராளமான ஓவியங்களும் நூலுக்கு அழகு சேர்க்கின்றன. நல்ல நல்ல குட்டிக் கதைகளை எடுத்துச் சொல்லி, நகைச்சுவை இழையோட நற்கருத்துக்களும் கூறி, நல்ல சிந்தனைகளை நம் மனங்களில் பதியவைக்கும் தென்கச்சியின் இதுபோன்ற நூல்களை நாம் படித்து மகிழ்வதோடு, கல்கி ராஜேந்திரன் கூறுவது போல், நமது நண்பர்களுக்காகவும், நிறைய வாங்கிப் பரிசளிப்பதும் சாலச்சிறந்தது.