book

பெரியார் இல்லாமல் நானா என்றார் அண்ணா

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருச்சி செல்வேந்திரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

பெரியார் அவர்களும் அறிஞர் அண்ணா அவர்களும் இந்தப் பிரச்சினையை லட்டி சார்ஜ் இல்லாமல் எப்படி நடத்துவது என்று சிந்தித்து பேச முற்பட்டார்கள். நீண்ட நேர பேச்சுக்குப்பிறகு, அண்ணா அவர்கள் நாளைய இந்தி எதிர்ப்பு மறியல் பெண்கள் ஈடுபடச் செய்யலாம். அப்போது போலீசார் லட்டி சார்ஜ் செய்யமாட்டர்கள் என்று அய்யாவிடம் கூறினார். பெரியார் இதற்கு சம்மதிக்கவில்லை. பெண்களை எப்படி இவ்வளவு பகிரங்கமாக மறியலில் ஈடுபடவைப்பது? ஆதித்தன் என்கின்ற போலீஸ் அதிகார் இரக்கமே இல்லாமல் பெண்கள் மீதும் லட்டி சார்ஜ் நடத்தினால் நாளை பழிச்சொல் அல்லவா ஏற்படும என்றார் பெரியார்.

இறுதியில் அண்ணா அவர்களின் யோசனையைப் பெரியார் ஏற்றார். பெண்கள் நாளை மறியலில் ஈடுபடுவர் என்றும், அதற்கு மறு நாள் பெரியாரும் அண்ணாவும் மறியலில் தலமை வகிப்பர் என்றும் முடிவெடுக்கப்பட்டது.