இன்று நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகள் பெருகிக் கொண்டே வருகின்றன. இதனை ஒரு தொழிலாக ஆரம்பித்து விட்டார்கள். பெரிய பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தான் சம்பாதித்த பணத்தில் பெரிய மருத்துவமனையை ஸ்டார் ஹோட்டல் போல் கட்டி, பணம் கறக்கிறார்கள். மக்களும் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம், அந்த மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கி, அறுவை சிகிச்சையும் செய்து பறிகொடுத்து விட்டு பரிதாபமாக நிற்கும் காட்சியை நாம் அதிகம் பார்க்கிறோம். இப்படி கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.
என்று மருத்துவமனைகள் வியாபார நோக்குடன் ஆரம்பித்தார்களோ அன்றே நாம் விழித்து கொள்ள வேண்டாமா? இதற்குள் நாம் காலடி எடுத்து வைக்க கூடாது என்ற எண்ணம் வர வேண்டாமா? எதனால் இவ்வளவு நோய்கள் வந்து, இவ்வளவு கூட்டம் மருத்துவமனையில் நிரம்புகிறது?