ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல நல்ல ஆலோசனைகளையும் தரவேண்டியது மருத்துவருடைய கடமையாகும். எனவே தான் என்னைப் போன்றவர்கள் யோகா, ரெய்கி, ஹிப்னாடிசம், இயற்கை மருத்துவம், மூலிகை பற்றிய அறிவு, சித்த மருத்துவம், அக்குபஞ்சர் போன்றவற்றைக் கற்று நோயுற்றவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிப்பதுடன் ஆலோசனைகளையும் கூறுகின்றோம்.