உலகத்தில் பல புத்தர்கள் உண்டு. ஆனால் போதிதர்மர் எவரெஸ்ட் சிகரத்தைப்
போன்று தனித்து, உயர்ந்து நிற்கிறார். அவர் இருந்தது, வாழ்ந்தது, உண்மைகளை
வெளிப்படுத்திய விதம் எல்லாமே அவருடையது. எதனுடனும் ஒப்பிட முடியாதது. ஏன்
அவருடைய குரு புத்தரைக் கூட போதிதர்மருடன் ஒப்பிடமுடியாது. புத்தர் கூட
இந்த மனிதனை ஜீரணிக்க மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்.தன் குருவின் போதனைகளைப்
பரப்ப, போதிதர்மர் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு பயணம் செய்தார்.
இத்தனைக்கும் புத்தருக்கும், போதிதர்மருக்கும் ஆயிரம் வருட இடைவெளி
இருந்தது. ஆனால் போதிதர்மரும் அவரைப் போன்ற மனிதர்களுக்கும் நேரமோ,
இடைவெளியோ கிடையாது. போதிதர்மருக்கு சமகாலத்தவராக இருந்தார். எனக்கு
புத்தர் சமகாலத்தவராக இருப்பதைப்போல, வெளித்தோற்றத்தில் நீங்கள் எனக்கு
சமகாலத்தவர்கள். ஆனால் உங்களுக்கும், எனக்கும் வெகு நீண்ட
தூரமிருக்கிறது.நாம் வெவ்வேறு கிரகங்களில் வாழ்கிறோம். இந்த நூற்றாண்டின்
துவக்கத்தில் சில குறிப்புகளின் சிதறல்கள் கண்டறியப்பட்டன. துங் ஹவாங்கில்,
எம்.ஏ.ஸ்டெயின் தோல்வடி எடுத்தார். போதிதர்மரின் பெயர் - தெரியாத
சீடர்களின் குறிப்புகள். சீடரின் கேள்வி- . போதிதர்மரின் பதில் பாணியில்
அமைந்திருந்தன இந்தக் குறிப்புகள். இந்தக் குறிப்புகள் துண்டு துண்டாக
இருந்தாலும், அவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.