- அடிப்படை மாற்றங்களை நோக்கி என்ற நூல் பேரா.க.பழனித்துரை தன் 30 ஆண்டு கால களச் செயல்பாட்டு அனுபவத்தில் எழுதப்பட்டதாகும் நம் கிராமியச் சமூகத்தில் நடைபெற வேண்டிய அடிப்படை மாற்றங்களை எப்படிக் கொண்டு வருவது, அதற்கான வாய்ப்புக்கள் என்னென்ன இருக்கின்றன
- அவைகளை எப்படிக் கையாள்வது, இவைகளுக்குத் தேவையான தலைமை பற்றி விளக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் மக்களை அதிகாரப்படுத்துவதும், மேம்பாட்டுப் பணிகளில், ஆளுகைச் செயல்பாடுகளில் அவர்களை பங்கேற்க வைப்பதன் அவசியத்தையும் கவனப்படுத்தியுள்ளார்.
- இன்றைய சூழலில் சமூகத்தின் அடிப்படை மாற்றங்களுக்கு மாற்றுப்பாதை, மாற்று அரசியல், மாற்றுத் தலைமை என அனைத்திலும் புதுமைகள் தேவை என்பதை சுட்டிக்காட்டி செயல்பாட்டுக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியுள்ளார். கிராமியச் செயல்பாட்டில் தங்களை கரைத்துக் கொண்டு களத்தில் நிற்கும் செயல்பாட்டாளர்களுக்கு இது ஒரு அருமையான வழிகாட்டிக் கையேடு.