புதிய பஞ்சாயத்து அரசாங்கம் ;குடியரசுத் தலைவராக இருந்து மக்களின் உள்ளங்களில் நல்லெண்ணங்கள் கொடி உயர்த்த வேண்டும்.
நல்லாட்சி நிலவ வேண்டும். இந்தியாவை 2020க்குள் நல்லரசாக,வல்லரசாக மாற்றவேண்டும் என்று
கனவு கண்டு நாட்டு மக்களையும் கனவு காணச் சொன்னவர் அணு விஞ்ஞானி பாரத ரத்னா,
டாக்டர் ஆ.ப. ஜெ. அப்துல்கலாம் அவர்கள்.அவர் உள்ளாட்சியின் வலிமையை உணர்ந்தவர்.
அதன் மூலம் நல்லாட்சி காணலாம் என்ற நம்பிக்கைகொண்டவர்.பல சொற்பொழிவுகள்,நேரடி
விவாதங்கள், பஞ்சாயத்துக்களுக்குச் சென்று பார்வையிட்டுக்கூறிய அறிவுரைகள்
ஆகியவைதான் அப்துல்கலாம் அவர்களின் வெளிப்பாடுகள். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள
கருத்துக்கள், செயல்திட்டங்கள், வேண்டுகோள்கள் அனைத்தும் அப்துல்கலாம் அவர்களின்
பேச்சுக்களிலிருந்து எடுத்து விளக்கித் தொகுக்கப்பட்டுள்ளன.கிராமங்கள் முன்னேறினால்
மாவட்டம் முன்னேறும், மாவட்டங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும் என்ற
அடிப்படை இந்நூலில் விளக்கப்பட்டு, பொதுமக்களைச் செயல் திட்டங்களில் ஈடுபடுத்துகிறது.
இது ஒரு வழிகாட்டு நூல், உள்ளாட்சிகள் எங்கே செல்கின்றன என்பதை எடுத்துகாட்டிச்
செல்லவேண்டிய தடத்தினைச் சுட்டிக்காட்டுகிறது.
_ பதிப்பகத்தார்.