வீர முழக்கமும் தான் கொண்ட கொள்கைக்காகவும் சுதந்திர வேட்கைக்காகவும் தன் உயிரையே கொடுத்து, தன் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக உள்ளத்தை அவன் வரலாற்றைப் படித்து முடித்துப் பல ஆண்டுகள் ஆனாலும் நம் மனத்தைவிட்டு என்றும் அகலாது. தமிழகத்தின் வரலாறுகள் மறைக்கப்பட்டே வந்துள்ளன. அவைகளில் தீரன் சின்னமலையின் வரலாறும் அடங்கும்.
மறைக்கப்பட்ட வரலாற்றை எடுத்துச் சொல்வது தான் இந்நூல்.