தமிழிலக்கியம் ஒரு பெரிய பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால் நவீனத் தமிழிலக்கியம் அந்தப் பெரிய பாரம்பரியத்தில் இன்றுவரை பொருந்தவில்லை.அதனால் படைப்பு எழுத்தாளர்கள் தமிழ்த்துறைகளில் இருந்து உருவாக வில்லை. அதற்குப் பதிலாகத் தமிழையும் அதன் பாரம்பரியத்தையும் அறியாதவர்கள் தற்கால இலக்கியவாதிகளாக வலம்வருகிறார்கள். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் குறையைத் தமிழ்த்துறையினர் நீக்க வேண்டும். இப்படிச் சொன்னால் போதாது. இன்னும் கொஞ்சம் ஆழமாகப் இப்பிரச்சனையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.