சமூக ஊடக/இணைய விவாதங்களில் காத்திரமானவைகளும் உண்டு. அது தற்காலத்தில் நிகழும் மாற்றங்கள்,சூழல், அரசியலைக் கொண்டு கலை இலக்கியத்தில் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களையும், ஏற்கனவே பேசப்பட்ட விஷயங்களையும் சூடு தணியாத உரையாடல்களாக வைத்திருக்க முடியும். காலத்தால் மட்டும் கேட்கப்படும் கேள்விகளின் தொனி மாறிவிடுகிறது. ஆனால் கேள்விகள் மாறினாலும் எக்காலத்திற்கும் மாறாத பதில் ஒன்று இருக்கிறது. அதுவே அசலான படைப்பு மனநிலையின் இயல்பில் வெளிப்படும். அதை மட்டுமே முன்வைத்து பேசும் கட்டுரைகள் மணி எம கே மணியுடையது. சிலவற்றைக் கொஞ்சம் சத்தமாகத் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.