தீபம் நா. பார்த்தசாரதி என்று புகழப்படும் நா.பா. அவர்கள் 55 ஆண்டுகளே வாழ்ந்திருப்பினும் அதற்குள் அவர் படைத்தவை 93 புத்தகங்கள். இவற்றில் சிறுகதை குறுநாவல் தொகுதிகளும் உண்டு. இவை தவிர இவர் இதழ்களில் எழுதியவைகளும் பலப்பல. இவ்வாறு எழுத்தே வாழ்வாக வாழ்ந்து மறைந்தவர் நா.பார்த்தசாரதி.