ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தேவையான பொருட்களோடும் வங்காளத்தில் பலாஸ்பூர் சென்ற அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களைச் சந்தித்து விடுதியில் தங்சி, பொறுப்பான உதவியாளர்களின் ஒத்துழைப்போடு எங்கெங்கு எவ்வாறு யார்யாருடன் சென்று ஆராய வேண்டும் எனத் திட்டமிட்டு ஆய்வைத் தொடங்கினார் என்பதை ஆசிரியர் தெளிவாகவும் சுவைபாகவும் குறிப்பிட்டுள்ளார். பல நாள்கள் அரிதின் முயன்று அலைந்து திரிந்து அரியவகைப் பறவைகளைக் காணவும் இயலாத நிலையில் அவ்வகைப் பறவைகளைச் சுட்டுக் கொன்று மாமிசத்தை விற்றுப் பலரும் வாழ்க்கை நடத்தி வந்ததால் பறவையினங்கள் அழிந்து வருவதை அறிந்து கோபமும் ஆவேசமும் கொண்டு திசா வருந்திப் பேசியது நம் கண்களைக் கலங்கச் செய்கிறது.