காலம் காலமாகப் பல்வேறு விமர்சனங்கள் முரண்பாடுகள் இருந்தாலும் பொது நோக்கம் என்று வரும்போது இங்கே முன்பிருந்த தமிழ்த் தேசிய முன்னோடிகளும் திராவிட முன்னோடிகளும் சேர்ந்துதான் செயல்பட்டார்கள். இடதுசாரிகளும், மற்றவர்களும் சேர்ந்துதான் செயல்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை மறந்து விட்டு டெல்லியின் வல்லாதிக்கத்துக்கு எதிராகத் திருப்ப வேண்டிய உங்களுடைய ஈட்டி முனையைத் திராவிட இயக்கத்தின் மீது, அதுவும் தந்தை பெரியாரின் மீது நீங்கள் நீட்டுகிறீர்கள். அப்படியென்றால் உங்களுடைய நோக்கம் என்ன?