தமிழ்த் தேசம் என்பது குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்ட காலங்களைக் கடந்து, 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு, தமிழ்த் தேசம் என்பது ஒரு தேர்தல் அரசியலுக்கான முழக்கமாக மாற்றப்பட்ட ஓர் அவலமான சூழல்களைக் கடந்து, அதுபற்றிய விரிவான ஆய்வுகள் இப்பொழுது வரத் தொடங்கியிருக்கின்றன. அதனால் இந்தத் தலைப்பு, இதுபற்றியான தேவை அதை முன்னெடுப்பதன் வழியாக நாம் எப்படி அதைச் செயல்படுத்த முடியும் என்பது குறித்து இந்தக் கருத்தரங்கம் ஒரு சிறந்த முன்னெடுப்பைத் தொடங்கி இருக்கிறது என்பதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.