உன் முன்னோரை, விட சாஸ்திரம், சம்பிரதாயத்தை விட, வெங்காயம், வெளக்கமாத்தை விட, உன் அறிவு பெருசு அதை நீ சிந்தி, நானே சொன்னாலும் உன் அறிவுக்கு சரியென்றால் மட்டும் எடுத்துக்கொள் - எனச் சொல்லி சுயமரியாதையோடு வாழச்சொன்ன பெரியார் மீதான விமர்சனங்கள். பெரியார் வாழும் காலத்தில் தொடங்கி பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்கிறது. அவர் விமர்சனங்களை கண்டு அஞ்சியது இல்லை. தான் சொன்ன கருத்துக்களை அவர் எப்போதும் விமர்சனப் பார்வையோடு அணுகச் சொன்ன தலைவர் தந்தை பெரியார் ஆவார்.