உலகில் தோன்றிய மனிதர்களின் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லை. இது இறைவனின் படைப்பின் இரகசியமே. ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவதே ஜாதகம். அதில் நேரத்தைச் சரியாகக் குறிப்பிடவில்லையெனில் நவாம்சம், போன்ற வர்க்கங்களில் கிரகங்கள் மாறியே இருப்பதைப் பார்க்கிறோம். ரேகைகள் ஒருவரின் கையில் அமைந்துள்ளது போல் மற்றவரின் கையில் இருக்காது. அதனால்தான் காவல் துறையில் தண்டனை பெற்ற கைதிகளின் கைவிரல் ரேகைகளைப் பதிவு செய்கிறார்கள். கிரகங்களுக்கும் ஒருவரது கைரேகைக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்கமாகத் தந்திருக்கிறேன்.