தமிழ்மொழியில் யோக மார்க்கம் பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் எடுத்துக் கூறும் நூல் திருமூலரின் திருமந்திரம். இந்நூலுக்குப்பின் சிறந்த நூல் தொன்றவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. இதற்கு வழி நூல்களும் தோன்றவில்லை. சரியான விளக்கங்களும் அமையவில்லை. திருமூலரை முதல் சித்தர் எனவும், சித்தர் சபைக்குத் தலைவர் என்வும் கூறுவர்.