தனது குடும்பத்தினரிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மீரா, அவளுக்கு பக்கபலமாக வந்த ஷஷ்டி உதவியாக இருந்தானா இல்லை அவளுக்கு இன்னொரு சுமையாக இருந்தானா?
மீரா சஷ்டி இவர்களுக்கு மத்தியில் நின்று ஆட்டையைக் கலைக்க முயலும் ரேச்சல் அவளது மகள் குட்டி ரேணு. மீராவை எண்ணி காதல் ராகம் பாடும் கண்ணன், சஷ்டியின் எதிரி பிங்கு. இவர்கள் அனைவரும் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். மீரா இந்தப் பரிட்சையில் தோற்க வேண்டும்.
ஒருவர் வாழ்க்கையில் தோற்க வேண்டும் என்று வேண்டுவோர்கள் பலவிதமான முகமூடிகளை அணிந்துக் கொண்டு தரமற்ற வேலைகளை செய்வதும், சேற்றை வாரி இறைப்பதும் இயற்கைதானே. மீராவுக்கும் இவை அனைத்தும் நடக்கிறது.இவர்களது கனவு பலித்ததா? இதனை அறிய பூவெல்லாம் உன் வாசம் நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.