தியானம் என்பது மிக ஆழ்ந்த பொருள் உள்ள ஒரு சொல்லாகும்.அலை பாயும் மனத்தை ஒருமுனைப் படுத்துவதற்கு ஏற்ற உபாயம்,தியானம் என்பதை வேதகால ரிஷிகள் கண்டு உணர்ந்து போதித்தார்கள். இனம் தெரியாத கிலேசத்தை மன இருட்டை அகற்றும் மார்க்கம் தியானம்,தியானம் செய்யும் போது மனம் புற உலகிலிருந்து விடுதலை பெறுகிறது. விலகி நிற்கின்றன. மனிதனிடம் உறங்கிக் கிடக்கும் சக்திகள் வீரியத்துடன் வியாபகம் பெருகின்றன.விழிப்புற மனோசக்தி பேராற்றலை வழங்குகிறது.இந்த ஆற்றலுடன் வாழ்க்கையை சந்திக்கும் போது எல்லா பிரச்சினைகளும் துலாம்பலமாக தெரியும். செய்யும் காரியங்கள் அனைத்தும், செம்மையுறும். வெற்றிகள் கைகூடும்.