எழுத்தும் பேச்சும் இரு கண்களாகக் கொண்ட சுவாமி ராகவேந்திரா தீர்த்த ஸ்ரீஹரி அவர்கள் தன்னை சமூகத் தொண்டில் இணைத்துக் கொண்டு, தான் இமயமலைச் சாரலில் பல ரிஷிகளிடம் கற்ற யோகம, தியானம் முதலிய அரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கிட்டி வெல் சில்ரன்ஸ் அகாடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி கிரியா யோகம் என்ற புதிய யோக முறையை பயிற்றுவிக்கிறார். ஆழ்ந்த ஆன்மீக ஞானம், கொண்ட இவர் தனது சொற்பொழிவுகளின் மூலம் உலகெங்கும் ஆன்மீகக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார்.
பொதுவாக மதங்களைக் கடந்து மனித மனங்களை நேசிக்கும் இவர், இதுவரை 30 நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் தியானம் எப்படி வாழ்வை உயர்த்துகிறது என்ற மையக் கருத்து தியானித்துச் சொல்லியிருக்கிறார்.