பழந் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நானிலங்களில் வாழ்ந்த மக்கள் தம் நிலத்தில் விளைந்த பொருள்களைப் பிற திணை மக்களிடம் கொடுத்துத் தமக்குத் தேவையான பொருள்களைப் பிற திணை மக்களிடம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். இப்பொருள்களின் பரிமாற்றங்கள் பண்டமாற்று முறையாக மாறியது. இதுவே வணிகத்தின் தொடக்கமாக அமைகிறது. இப்பண்டமாற்று முறையின் வளர்ச்சியால் நெய்தல் நிலப்பகுதிகளில் கடல் வணிகம் தொடங்குகிறது.