டால்ஸ்டாய் எழுதியுள்ள மகத்தான இலக்கியமான போரும் சமாதானமும் (வார் அன்ட் பீஸ்) நமது சரித்திர நாவலாசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், தமிழில் எழுதுகிறவர்கள் யாரும் டால்ஸ்டாரைப் பின்பற்றுவதில்லை வரலாற்றின் பகைப்புலத்தில் கற்பனையைத் தாராளமாக உலவ விடும் அலெக்ஸாண்டர் டூமாஸ். விக்டர் ஹ்யூகோ, வால்டர் ஸ்காட் போன்றவர்களின் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். கதைச் சுவைதான் முக்கியம் கண்நோக்குடனேயே சரித்திர நாவல்களும், தொடர்கதைகளும் இங்கு படைக்கப்படுகின்றன.
'விடிவெள்ளி' எனும் வரலாறு தழுவிய கற்பனை, 'புதுமை' இதழில் வெளிவந்தது.