குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பெருமாளின் மனைவி பிரசவத்தின் போது உயிரிழக்க பெருமாளோ குழந்தை பிறந்த துரதிஷ்டத்தினால் தான் தனது மனைவி இறந்தாள் என எண்ணுகிறான். பின்னர் பெருமாள் சரஸ்வதியை (வெண்ணிற ஆடை நிர்மலா) இரண்டாவதாக திருமணம் செய்கிறார். சரஸ்வதி பெருமாளின் மகனை தனது மகன் போல வளர்த்து வந்தார். ஆனால் பெருமாளோ ஒன்றும் அறியாத அப்பையனை சிறைச்சாலைக்கு அனுப்பினார்.
ராஜா (பார்த்தீபன்) ரிக்சாகாரனாகவும் அநியாயத்தை தட்டி கேட்கும் ரௌடியாகவும் மாறியிருந்தான். இதனால் அடிக்கடி சிறைச்சாலைக்கும் போய்வந்தான். மாரி (ஜோனன்) ஒரு பணக்கார வியாபாரியாகவும் இருந்தார். அவரின் அடியாளான காசி (மஜித்) பிள்ளைகளை கடத்தி அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணம் பறித்தான். ஓர் ஊடகவியலாளர் ராஜாவை பயன்படுத்தி தனது பிள்ளையை கடத்தல் காரர்களிடம் இருந்து பெற்றார். அதன்பின்னர் ராஜா பெருமாள், மாரி, காசி ஆகியோருக்கு எதிராக செயற்படுவது கதையின் இறுதி அம்சமாக அமைகிறது.