அறுசுவை உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படி சாப்பிடும்போதே, 'அவ்வளவுதான் சாப்பிட முடியும்;இனி சாப்பிட்டால்,ஜீரணமாவது கடினம்' எனும் வேகத்தடை நிலை ஒன்று வரும். "வேண்டாம்;போதும்!" என அறிவு உத்தரவிடும். 'சரிதான்; இத்துடன் போதும்!' என்று செயல்திறனும் ஒரு முடிவுக்கு வரும். உடனே, நீங்கள் எழுந்திருந்து, கையலம்பச் செல்கிறீர்கள் எனில், அதுதான் துறவு!
பசித்தால்தான் சாப்பிடுகிறோம். வாயில் போட்டு, நன்றாக மென்று சுவைத்துச் சாப்பிடுவதுடன் நம்முடைய செயல் முடிகிறது. அதையடுத்து என்ன நிகழ்கிறது தெரியுமா?