228 தமிழ் உரை கடை உருவாக்கின என்பது மிகையாகாது. யாருக்கும் அஞ்சாது, எந்த அடிமைப் பணிக்கும் தம்மை உரிமையாக்காது தனித்து இருந்து, குடும்ப வாழ்வு குலைந்த போதும் தம் அண்ணனர் ஆதரவில் இருந்து, சாது அச்சகம் அமைத்து. சளேயாது உரை நடையில் பலப் பல நூல்கள் எழுதிய இராயப் பேட்டை முனிவர் திரு. வி. கல்யாணசுந்தரனரைத் தமிழ் உலகம் மட்டுமன்றி, அரசியல் உலகமும், தொழி லாளர் உலகமும், பெண்டிர் உலகமும் என்றென்றும் போற்றக் கடமைப்பட்டன. அவர் தமிழ் கடைசிறப்பாக உரை கடை-எல்லாராலும் போற்றப் பெறுவது. இன்று வாழ்கின்றவருள் பல்லோர் அவர் உரை நடையைப் பின் பற்றுபவர் என்னலாம். அவர் நடையில் ஒரு புது அழகுபொலிவு, விளங்கக் காணலாம்