மனிதனுக்குள் மிகப் பெரிய சக்தி இருக்கிறது. மனித உடல் ஒரு சாதனம். நம்முள் இருக்கும் மிகப் பெரிய சக்தியை நாம் உணர்ந்து, அந்த ஆக்க சக்திகளை வெளிகொணரும்போது அதை நமக்கும் பிறருக்குமாகப் பயன்படுத்தும்போது ஒரு கர்மயோகி தோன்றுகிறான்; ஒரு கடமை ஞானி பிறக்கிறான்; ஒரு பொது மகன் - பெருமகன் அப்போது நாட்டில் உலவுகிறான். நாம் இதை சதா வாழ்க்கையில் நினைவு கொள்ள வேண்டும்.